search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்"

    • இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
    • 15 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

    ரெட்டியார்பாளையம் பகுதியில் இருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்ற அந்த நாய், பொதுமக்களை கடித்து குதறியது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 15 பேரை அந்த நாய் கடித்துள்ளது.

    காயமடைந்த அனைவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். 15 பேரைவெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசி.
    • நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் வண்ணம் பூசவும் திட்டம்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் விட முடிவு செய்யப்படுகிறது.

    தடுப்பூசி போடப்பட்டு பின்னர் அதே தெருவில்

    தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்கி உள்ளது.
    • 83 தெரு நாய்களை பிடித்து உள்ளோம். 52 நாய்கள் கண்காணிப்பில் உள்ளன.

    சென்னை:

    சென்னை ராயபுரத்தில் கடந்த வாரம் தெருநாய் ஒன்று 28 பேரை ஒரே நேரத்தில் கடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 28 பேரை கடித்த அந்த நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். அதன் உடலை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் அந்த நாய்க்கு வெறி நோய் (ரேபிஸ்) பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    தெரு நாய் கடிக்கு சமீபத்தில் பலர் பாதிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வட சென்னை பகுதி மட்டுமின்றி சென்னை நகர்ப்பகுதி முழுவதும் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்கி உள்ளது.

    இந்த ஆண்டு ராயபுரம், திருவொற்றியூர், பெருங்குடி மற்றும் மாதவரம் போன்ற மண்டலங்களில் 5 தெரு நாய்களுக்கு 'வெறிநோய்' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

    அனைத்திற்கும் இனக்கட்டுப்பாடு செய்ய இந்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    ராயபுரம் மண்டலத்தில் 28 பேரை வெறிநாய் கடித்து உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 28 பேரின் முகவரி சேகரித்து கண் காணிக்கப்படுகிறது.

    அவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் இன்யூனோ குளோடிலின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

    அவர்கள் 3-ம் நாள், 7-வது நாள், 14-ம் நாள், 28-வது நாள் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள்.

    அந்த தெரு நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதியானவுடன் வார்டுகள் 49, 50 மற்றும் 52 பகுதிகளில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 83 தெரு நாய்களை பிடித்து உள்ளோம். 52 நாய்கள் கண்காணிப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • தெரு நாய்களை பிடிக்க பயன் படுத்தப்படும் வாகனம் அடிக்கடி பழுதாகி விடுகிறது

    ராயபுரம்:

    சென்னை ராயபுரத்தில் கடந்த வாரம் தெருநாய் ஒன்று 28 பேரை கடித்தது. தொடர்ந்து பலரை கடிக்க முயன்றதால் அப்பகுதி மக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

    தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டோர் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    கொல்லப்பட்ட நாயை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் 28 பேரை கடித்த தெரு நாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) பாதிப்பு இருந்தது உடல் பிரேத பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையில் நாய் கடித்தவர்களுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு தலின்படி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    தெரு நாய் கடித்ததில் சிலர் வகை 2 ஆகவும், சிலர் வகை 3 ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி 5 டோஸ் போட வேண்டியிருக்கும். அதனை பின்பற்றி தடுப்பூசி போடப் படுவதாக ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து மாநாகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து மீண்டும் அந்த இடத்திலேயே விடப்படுகிறது. சென்னையில் ஒரு லட்சம் தெருநாய்கள் இருக்க கூடும் என தோராயமாக கணக்கிடப்படுகிறது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு 16 ஆயிரம் தெருநாய்களுக்கும், இந்த வருடம் 17,813 தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 13,486 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    ஆனாலும் தங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்களின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டால் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் தெரு நாய்களை சமூக ஆர்வலர்கள் தத்தெடுக்க முன்வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ராயபுரம், கல்மண்டபம், எம்.சி. ரோடு, ஜி.கே.ரோடு ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் 2 நாட்களாக பிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று 25 நாய்கள் பிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தெரு நாய்களை பிடிக்க பயன் படுத்தப்படும் வாகனம் அடிக்கடி பழுதாகி விடுகிறது. கடந்த ஒரு மாதமாக தேனாம்பேட்டையில் உள்ள நாய் வாகனம் பழுதாகி விட்டது. அதனால் தெருநாய்களை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    • நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது.
    • தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் தேவி என்ற பெண் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து குழந்தையின் முகத்தில் கடித்து குதறி உள்ளது.

    நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அதே பகுதியில் நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் ரெட்டமலை சீனிவாசன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளதாகவும் அந்த தெரு நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்துடனே அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும் மாநகராட்சிக்கு புகார் அளித்தால் ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று திரும்பவும் அந்த பகுதியிலேயே விட்டு விடுவதாகவும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
    • பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை, கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ஏற்கெனவே சங்கரன்கோவில், மேல நீலிதநல்லூர், புளியங்குடி பகுதிகளில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட நபர்கள் தெரு நாய்களால் கடிபட்டு பாதிப்படைந்ததால் பொதுமக்களுடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடையநல்லூர் தொகுதி முழுவதுமே பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை இருக்கிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உடன் இருந்தார்.

    • பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது.
    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது. அதை விரட்ட சென்ற தாயாரையும் கடிக்க வந்த போது அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் நாயை விரட்டினர். கடந்த மாதத்தில் மட்டும் கீழக்கரையில் 9 நபர் களை வெறி நாய்கள் கடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களை அச்சு றுத்தும் வெறி நாய் களை பிடிக்க கீழக் கரை நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகா ரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர் தலைவர் அபுதாஹிர் கூறுகையில்,

    கீழக்கரையில் தொடர்ச்சியாக வெறி நாய்கள் பொது மக்களையும் குழந்தை களையும் கடித்துக் கொண்டி ருக்கிறது. இதனை எஸ்.டிபி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்ப தோடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கீழக்கரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன
    • தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்

    நாகர்கோவில் :

    வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இறைச்சி கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைக ளில் சிதறி கிடக்கும் உணவு பொருட்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து குப்பைகளில் கொட்டப்படும் மீதமுள்ள உணவுகளை தின்று வளர் கின்றன.

    தற்போது தெரு நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங் களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.

    மேலும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி நகர் நல மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்.

    தெரு நாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெரு நாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மாநகராட்சி கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியு றுத்தப்பட்டுள்ளது.

    அதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன.
    • இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது.

    திருப்பூர்

    திருப்பூர்- நொய்யல் ஆற்றங்கரை பாலம் பகுதி முதல் சக்தி தியேட்டர், யூனியன் மில் ரோடு, வாலிப்பாளையம், ஊத்துக்குளி ரோடு, வாலிப்பாளையம் முருகன், சாய்பாபா கோவில் பகுதிகளில் பகல் நேரங்களில் கும்பலாக நின்று நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன. இதனால் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- தனியாக நடந்து செல்பவர்களை விரட்டி வந்து கடித்து விடுகிறது.

    இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது. கும்பலாக ஒன்று சேர்ந்து கடிக்க வருவதால் என்ன செய்வது யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் அச்சம் அடைகின்றனர். இது வரை கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் காலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள் நாய்களுக்கு பயந்து பொழுது விடிந்த பிறகு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி வயதானவர்கள் தான் நாய்கடிக்கு ஆளாகிறார்கள். ஆகவே இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த ஒருவார காலத்தில் தெருநாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் தெருநாய்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கேரளாவில் தெரு நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.

    • நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.
    • நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது.

    தெருநாய்கள் மீது வெறுப்பு காட்டுபவர்களுக்கு மத்தியில், ஒரு தெருநாய்க்கு இளைஞர்கள் சிலர் சேர்ந்து வளைகாப்பு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பரத் சந்திரன் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பெல்லா என்று பெயரிடப்பட்ட தெருநாய் ஒன்று கர்ப்பமான நிலையில் அந்த நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.

    அந்த நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது. மேலும், வீடியோவை பகிர்ந்துள்ள பரத்சந்திரனின் பதிவில், வெறுப்பு நிறைந்த உலகில் நாங்கள் எங்கள் பெல்லாவுக்கு வளைகாப்பு விழாவை கொண்டாடுகிறோம். அவளுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 2 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன.
    • பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் உள்ள நாய்களை பிடித்து கூண்டுகளில் அடைத்தனர். 100-க்கும் ஏற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சாயத்து ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஊசி போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்தன.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    ×